பேரணியில் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்கியிருந்தன.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதே பேரணியில் கலந்து கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் கால அவகாசம் வழங்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வரவேற்றிருந்தார். எனினும் இன்று இடம்பெற்ற பேரணியில் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றியிருந்தார்.
ஆனால் பேரணியில் கலந்துகொண்ட மக்கள், மாவை சேனாதிராஜா கலந்துகொண்டதையிட்டு விசனமடைந்தாக மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தப் பேரணியால் யாழ்ப்பாணம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.