மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரன கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேர்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவு எடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மைத்திரிபால சிறிசேன கென்யா நாட்டில் நின்றபோது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கசியவிடப்பட்டிருந்தன.
அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணி தோல்வியடைவது உறுதியென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்கும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டால் மக்கள் அதனை நிராகாிக்க வேண்டுமென இடதுசாரி முன்னணி கூறியுள்ளது.
ஜே.வி.பி கருத்துக் கூறவில்லை. ஆனால் அவதானிப்பதாக மாத்திரமே ஜே.வி.பி தெரிவித்துள்ளது.