இந்தப் போராட்டம் குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கைப் பொலிஸாரும் இலங்கை விசேட அதிடிப்படையினரும் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.