அங்கு உரையாற்றிய அமைச்சர் நவின் திஸாநாயக்கா, தனது உரையின் போது கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து ஜனாதிபதி வேட்பாளரே எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது எனவும் அமைச்சர் நவின் திஸாநாயக்கா கூறினார். இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ள பல நிகழ்வுகளில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் நவின் திஸாநாயக்கா தெரிவித்தார்.
அதனையடுத்து உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவின் திஸாநாயக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன் நவின் திஸாநாயக்காவின் மாமனாரான சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்ப்பார்ப்பதாகவும் கோட்;டாபய ராஜபக்ச கூறினார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென கட்சித் தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.