இந்நிலையில் விசாரணையின் பின் முதலாம் திகதி திங்கட்கிழமை குறித்த ஆறுபேரையும் தலைமன்னார் பொலிஸாரிடம் இலங்கைக் கடற்படையினர் கையளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதான பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் குறித்த நான்கு நைஜீரிய நாட்டவர்களையும் படகு மூலமாக சட்ட விரோதமாக இந்தியாவிற்கு அழைத்து சென்ற வேளையிலேயே இலங்கை கடற்படையினரால் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான நைஜீரிய பிரஜைகள் நால்வர் தொடர்பான தகவல்களை தலைமன்னார் பொலிஸார் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மீரிகான தடுப்பு முகாமிற்கும், இலங்கைப் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை தலைமன்னார் பொலிஸாரால் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மாவட்ட நீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.