இந்த விபத்துக்களில் 42 பேர் பலியானதோடு மேலும் பலர் காயமடைந்து அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார். காயமடைந்தவரிகள் பலரின் உடல் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கவீனமடைந்திருப்பதாகவும் கூறினார்.
வாகனச் சாரதிகளின் கவனயீனத்தாலேயே இந்த விபத்துகள் இடம்பெறுவதாகவும் கூறிய அவர், வீதி விபத்துக்களைத் தடுக்க புதிய நடைமுறைகள் அமூல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கு- கிழக்கு மற்றும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் ஹயேஸ் வாகனங்களில் பயணம் செய்யும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களே கூடுதலாகப் பலியாவதாகக் கூறப்படுகின்றது.
சில நாட்களில் பன்னிரண்டு தமிழர்கள் வாகன விபத்துக்களில் பலியாகியுள்ளனர். இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பத்துப்பேரும், சென்ற சனிக்கிழமை அதிகாலை லன்டனில் இருந்து கொழும்புக்கு வந்த யாழ் நயினாதீவைச் சேர்ந்த 48 வயதான இளம் குடும்பப் பெண்ணொருவரும் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 65 வயதான குடும்பஸ்த்தரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.