யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முல்லைத்தீவு விசுவமடு, புத்தடிப் பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கியதில் தொட்டியடி விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதான தர்மபாலசிங்கம் தயானந்தன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவு மாணவரென உறவினர்கள் கூறுகின்றனர்.
கணேசமூர்த்தி கிரிசன் என்ற மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் மழை பெய்ய ஆரம்பித்ததும் வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபோது மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவன் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்திசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, இடிமின்னல் தாக்கம் தொடர்ச்சியாக இடம்பெறலாமெனவும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு. வடமத்திய மாகாணங்களில் கூடுதல் மழை பெய்யுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.