அதேவேளை. இன்று பிற்பகல் 2.30க்கு கொழும்பின் புநகர் பகுதியான தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹேட்டேல் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்புகளின் பின்னணி குறித்து பல்வேறுபட்ட ஊகங்கள், சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்தக் குண்டுவெடிப்புகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் தமிழ்க் கிறிஸ்த்தவ மக்கள் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தமிழர்கள் உட்பட 112 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 65 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகியுள்ளனர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளிலும் பதினொரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் இந்தக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கமோ இலங்கை பாதுகாப்பு அமைச்சோ அதிகாரபூர்வமாக இதுவரை எதுவுமே தெரிவிக்க்வில்லை.