இன்று பிற்பகல் முதல் கொழும்பு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஏழு நட்சத்திரக் ஹோட்டல் மற்றும் இரண்டு ஐந்து நட்சத்திரக் ஹேட்டல்களில் நடந்த குண்டுவெப்பில் கொல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பதினொரு வெளிநாட்டவர் பலியானதமாக ஆரம்பத்தில் இலங்கைப் பொலிஸ் ஊடப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியிருந்தார். ஆனாலும் பிந்திக்கிடைத்த தகவல்களின் படி 33 வெளிநாட்டவர் பலியானதாக இலங்கை அரசாங்கத்தின் சுற்றுலாத்துறைத் திணைக்களம் கூறியுள்ளது.
பெல்ஜியம், பிரித்தானியா. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்ததாகவும் இலங்கைச் சுற்றுலாத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை. குண்டுவெடிப்புடன் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் ஏழுபேரை கைது செய்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயரட்ண கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சிலரின் படங்களை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனாலும் இலங்கை அரசாங்கம் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.