கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பின் புநகர் பகுதியான அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது கூறியிருந்தனர்.
ஆனாலும் இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர்கள் பொய்யான தகவலை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விசா இன்றி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாக்கிஸ்தான் பிரஜைகள் ஆறு பேர் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.