நாளை புதன்கிழமை காலை முதல் வழமை போன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்படவுள்ள நிலையில் குண்டுகளுடன் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்துள்ளதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரச ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஊரடங்குச் சட்டம் நாளை புதன்கிழமை அதிகாலை நான்கு மணி வரை அமூலில் இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் குண்டுகளுடன் உள் நுழைந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை நாளை கொழும்பு நகரக்குள் உள்ள அரச, தனியார் அலுவலகங்களுக்கு பணியளர்கள் சமூகமளிக்கமாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை. உலகத்துக்கு ஒரே கடவுள் என்ற வாசகம் எழுதி ஒட்டப்பட்ட மோட்டார் iசைக்கிள் ஒன்றுடன் நபர் ஒருவர் கொழும்பு நகரைச் சுற்றி வலம் வரும் படம் ஒன்று பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.