இலங்கை முப்படையினரும் ஆலயத்திற்கு அருகாகவுள்ள வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சோதனை, தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
இன்று ஆலயம் ஆராதனைக்காகத் திறக்கப்பட்டபோதும் மிகவும் குறைந்தளவு மக்களே வருகை தந்தனர். ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் சுற்றளவில் வாகனங்கள் தரித்து நிற்க அனுமதியளிக்கப்படவில்லை.
அந்தோனியார் ஆலயத்தின் உட்பக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் உடைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தோனியார் ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று அந்தோனியார் ஆலயத்தின் முற்பக்கமாக மக்கள் வெளியேறும் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 135 பேர் கொல்லப்பட்டும் 110 பேர் காயமடைந்துமுள்ளமை குறிப்பிடத்தக்கது.