நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ள கொழும்பில் இருந்தும் பலர் சென்றுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சைவ சமயக் குருக்கள், அருட்தந்தையர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து துப்புரவு செய்தனர். சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டனர்.
இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாள் ஆண்டுதோறும் ஈழத் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த ஆண்டு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைக் காணரங்காட்டி இலங்கை முப்படையினர் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் போர்க்காலம் போன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
அவசரகாலச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.