அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சன்மிக லியனகே வரவேற்புரையாற்றினார். சர்வமத வழிபாடுககளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
போரில் கொல்லப்பட்ட இலங்கை முப்படையினரின் உறவினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கைத் தேசியப் படைவீர் கௌரவிப்பு எனப் பெயரிடப்பட்ட இன்றைய நிழக்வில் இசைவாத்திய நிகழ்வும் இடம்பெற்றது.
இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரிய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் மற்றும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள உயர் அதிகாரிகளும் நிகழ்வில் பங்குபற்றினர்.
சுமார் இரண்டு மணிநேரமாக இடம்பெற்ற நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட இலங்கை முப்படையினரையும் நினைவுகூர்ந்து பாடல்களும் இசைக்கப்பட்டன.