தமிழ் மக்கள் மீது இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கான மிகச்சிறந்த உதாரணமே யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமாகும்.
யாழ்ப்பாண நூலகம் 1981ஆம் ஆண்டு எரிக்கப்பட்டமையே வடக்கு- கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு மிகப் பெரிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்கள், வரலாறுகளை எடுத்துக்காட்டும் தமிழ் நூல்களும் ஆங்கில மொழி நூல்கள் உட்பட 6 மொழியிலான நூல்களும் யாழ் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 35 ஆயிரம் நூல்கள் இதன்போது எரிந்து சாம்பராகின.
1994ஆம் ஆண்டு கொழும்பு கிராண்ட்பாஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் காமினி திசநாயக்க, 1981ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது இந்த நூலகம் தீக்கிரையானது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று தனது அதிகாரத்தின் மூலம் பலாலி இராணுவ முகாமை விஸ்தரித்துக்கொண்டிருந்த வேளையில், யாழ். பொது நூலகமும் யாழ். நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.