(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்புச் சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய வழி என்ற தலைப்பில் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்று மகாநாயக தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றுச் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணத்தைக் கையளித்தார். ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்த தேரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.