(மட்டக்களப்பு, ஈழம்)
இலங்கைத் தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும், இலங்கை இராணுவச் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகத் தமது பதவிகளில் இருந்து விலகினர். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ஹபீர் காசிம், கட்சியின் மூத்த உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் இன்று புதன்கிழமை மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கட்சி வேறுபாடுகளின்றி சமுகத்தின் பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவே கூட்டாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது கூறியிருந்தார்.