(வவுனியா, ஈழம்)
இலங்கையின் தலைநகர் கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனைப் பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை திருகோணமலைக்குக் கடத்திச் சென்று, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அனுர சேனநாயக்கா உண்மைகளை மூடி மறைத்த குற்றச்சாட்டின் பின்னணியில் சட்டத்தரணி சவேந்திர பெர்ணாண்டோ செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.