(வவுனியா, ஈழம்)
தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்குச் சென்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, அங்குள்ள இளைஞர்களுடன் உதைபந்தாட்டம் விளையாடியுள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளில் வாழும் பிரமுகர்கள் வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருகின்றது. ஆனால் கலந்துரையாடலுக்குச் செல்லும் பிரமுகர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால வரலாறுகளைப் பற்றிப் பேசுவதாகவே கூறப்படுகின்றது.