(வவுனியா, ஈழம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்குமாறு கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சிகளும் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவுடன் முரண்பாட்டில் உடன்பாடாகக் கலந்துரையாடி வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகத் தெரிவு செய்யும் ஏற்பாடுகளும் முத்த உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ண ஆகியோர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருடன் உரையாடியுள்ளனர்.