செப். 09 22:06
(மட்டக்களப்பு, ஈழம்)
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் போன்ற கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் ஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. ஆண்கள். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என நூற்றி 86 தமிழர்கள் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதனை நினைவு கூர்ந்து சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத் தூபியில் நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.