ஒக். 10 13:48
(யாழ்ப்பாணம், ஈழம்)
ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசு தொடுத்திருக்கும் போரின் வடிவம் காலத்துக்குக் காலம் மாறி வருகிறது. புதிய, புதிய வடிவங்களில் அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத சக்திகளுக்குள்ளே ஒரு சிக்கலான போட்டியை சர்வதேசச் சக்திகள் தோற்றுவித்துள்ளன. எனவே, சிங்களத் தரப்புகளுடன் அல்ல, சர்வதேசத் தரப்புகளிடமே தமிழர்களின் பேரம்பேசும் அரசியலின் குறி இருக்கவேண்டும் என்கிறார் அனந்தி.