ஜன. 26 21:52
வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார், யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கதீற்றல் விதியில் உள்ள யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துறைசார்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.