பெப். 09 23:16
(யாழ்ப்பாணம், ஈழம்)
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. காலை 9.30க்கும் 11.30 க்கும் இடையிலான சுப நேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணி ,ஈபிஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் தத்தமது கட்சிகள் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.