பெப். 16 23:17
(கிளிநொச்சி, ஈழம்)
வடமாகாணத்தில் வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறிதத் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். குறிதத் அலுவலகத்தினை கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து திறந்து வைத்தனர். இவ்வலுவலகம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய குறித்த ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பி்ரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.