(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் குறைந்த பட்சம் பிரதேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டும் சொந்த முயற்சியினாலும் துப்பரவுப் பணிகள் ஆரமப்பிக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட முறையில் யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி இரணைமடுக்குள்ம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், ஆகிய தாயகப் பி்ரதேசங்களில் இலங்கை அரசாங்கம் கொரேனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து வெருகின்றது.