நிரல்
மார்ச் 05 22:31

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த எழுத்து மூல சமர்ப்பணம்

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலையக் கட்டடத்திற்கு அருகில் இருந்த போர்க்காலத்துக்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதை குழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காணாமல ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 04 22:22

இன அழிப்பை முன்னிலைப்படுத்தி சுயாட்சி அதிகாரத்தை தமிழர்கள் பெற வேண்டும்- சட்டத்தரணி காண்டீபன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே தகவல் சேகரிப்பு மாத்திரமே நடந்துள்ளது. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கைகளைக் காண்பித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் சர்வதேச விசாரணை நடந்ததாகக் கூறுகிறாரென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான காண்டீபன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
மார்ச் 03 22:47

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை விகாரைகளில் நடத்த முடியாது- மகிந்த தேசப்பிரிய

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்தல் காலங்களில் பௌத்த குருமார் தமக்குச் சார்பான கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக விகாரை வளாகங்களுக்குள்ளும், மத வழிபாடுகளின்போதும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கடந்த தேர்தல் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அத்துடன் தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் முறையிட்டிருந்தனர். இதனடிப்படையில் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
மார்ச் 03 13:36

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) போர்க்குற்ற விசாரணை, தமிழ் இன அழிப்புத் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரி வந்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தக் கோரிக்கையை வற்புறுது்தி வந்தபோதும் அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மார்ச் 02 23:49

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது- சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் அணி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி பதவிக்கு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியின் மூத்த உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி இன்று திங்கட்கிழமை உருவாகியுள்ளது. சஜித் பிரேமதாச முன்னிலையில் ஏனைய கட்சிகள் இன்று கைச்சாத்திட்டுள்ளன. ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச அணி கடந்த சில நாட்களாகத் தீவிரமாகப் பேச்சு நடத்தியிருந்தது.
மார்ச் 01 22:21

வடக்குக் கிழக்குத் தயாகத்தில் பிரிவினைகளை உருவாக்கப் பல சுயேற்சைக் குழுக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் 19 ஆவது திருத்தச் சடடத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் முடிவில் நாளை கலைப்படவுள்ளது. சென்ற ஆண்டு நவமபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனாலும் சாதாரண பெரும்பான்மைப் பலம் கூட இல்லாத நிலையிலும் சிறுபான்மை அரசாங்கமாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் ஆட்சியமைத்து நான்கு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
பெப். 28 23:09

பொதுஜனப் பெரமுனவைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும்- ரணில், சஜித் முரண்பாடு நீடிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயற்பாடுகள் அதன் சின்னம் தொடர்பாக கூட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக ஆராயப்பட்டது. புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என சென்ற புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்மானம் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது.
பெப். 27 23:58

தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் விலகியமை குறித்த மகாநாயக்கத் தேரர்கள் வரவேற்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் வலிகியமை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியும் இந்தப் பிரேரணைக்கு 2015 ஆம் ஆண்டு இணை அனுசரனை வழங்கிய முன்னாள் அரசாங்கத் தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கருத்துக்கள் எதனையும் கூறவில்லை. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. மற்றும் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கொழும்பில் உள்ள ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் பிரதான கட்சி என்ற அடிப்படையிலும் 30.1 தீர்மானத்துக்குப் பொறுப் கூற வேண்டியவர்கள் என்ற முறையிலும் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளயிடப்படவில்லை.
பெப். 27 10:34

இலங்கை தொடர்பாக இந்தியா மௌனம்- பிரித்தானியா, கனடா கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டின் இன்று வியாழக்கிழமை இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். 30/1, 34/1, 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்த நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளது. மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை தொடர்பான விவாதத்தில் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.
பெப். 26 23:05

தீர்மானங்கள் இலங்கை அரசியல் யாப்புக்கு முரண்- ஜெனீவாவில் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை 2015, 2019ஆம் ஆண்டுகளில் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று புதன்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன புதிதாகப் பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தார். விலகவுள்ளதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.