பெப். 26 23:05
(கிளிநொச்சி, ஈழம்)
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை 2015, 2019ஆம் ஆண்டுகளில் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று புதன்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன புதிதாகப் பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தார். விலகவுள்ளதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.