(வவுனியா, ஈழம்)
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் உடனடியாகக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் அணியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்களுக்கு ஏற்படக் கூடிய அசொளகரியங்கள் குறித்துப் பேசவும் உரிய நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளும் வகையிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.