ஏப். 17 14:42
(வவுனியா, ஈழம்)
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாத இறுதியில் நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசக்ச முற்படுகின்றார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மருத்துவர் சங்கம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் 20 ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளோடு கலந்துரையாடவுள்ளதாக அறவித்துள்ளார்.