(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இழுபறி நிலை நீடித்துச் செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாகச் சந்தித்து ஆலோசனை வழங்குமாறு அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். சுகாதாரத் திணைக்களத்துடன் பேச்சு நடத்த முன்னர் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.