(யாழ்ப்பாணம், ஈழம்)
ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு எழுத்துலகில் பல விருதுகளைப் பெற்று ஈழத்துப் பெண்களுக்குப் பெருமை சேர்த்தவர் பத்மா சோமகாந்தன் என்று சங்கத்தின் தலைவர் ஆ,குகமூர்த்தி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1934ஆம் ஆண்டு பிறந்த இவர், யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, யாழ் மங்கையற்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். பின்னர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.