நிரல்
ஓகஸ்ட் 27 22:40

தமிழர் தேசம் ஒன்றுகூடியே தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர்- கஜேந்திரன்

(வவுனியா, ஈழம்) தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் கூறினார். 2004ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்த கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்து, முன்னணியின் சார்பில் முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
ஓகஸ்ட் 27 14:43

மூன்றாவது யாப்பை உருவாக்கப்போகும் ராஜபக்ச ஆட்சி

(மட்டக்களப்பு, ஈழம் ) ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையில் கூறியுள்ளமை ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனெனில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக மாறியபோதே இலங்கை ஒற்றையாட்சி அரசு (Unitary State) நிறுவப்பட்டுள்ளது. 1972ஆம் உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசு ஆகிய பின்னர் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடனப்படுத்தியது.
ஓகஸ்ட் 13 22:46

ராஜபக்சக்களின் மீள் எழுச்சி சர்வதேசத்துக்கான செய்தி என்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம், நினைத்ததைச் சாதிக்கவில்லை. புதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி- ரணில் முரண்பாடு, ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.
ஓகஸ்ட் 05 23:26

வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியில் கூடுதல் வாக்குப் பதிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் 25 தேர்தல் மாவட்டங்களிலும் 71 சதவீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 83 சதவீத வாக்களிப்பு பதிவாகியிருந்தது. 2015ஆம் ஆண்டு நடபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 76சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 2105ஆம் ஆண்டு தேர்தலில் 78.93% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்த ஆண்டு கொழும்பில் வாக்களிப்பு வீதம் குறைவாகும்.
ஓகஸ்ட் 04 22:12

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பொய்யான பிரச்சாரங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) புதன்கிழமை நடைபெறவள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 25 தேர்தல் மாவடடங்களிலும் உள்ள 12 ஆயிரத்து 774 தேர்தல் தொகுதிகளில் 12அயிரத்து 995வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோன வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 01 23:15

பிரச்சாரங்களில் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) தேர்தல் பிரச்சாரங்களின்போது அரச ஊழியர்கள் வேட்பாளர்கள் பலருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை. அரச சொத்துக்கள், அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ரட்ன்ஸ்பரன்ஸி இன்ரர் நஷனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. 150 முறைப்பாடுகளில் 137 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவையனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் ட்ரான்ஸ்பரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்கா ஒபயசேகர தெரிவித்துள்ளார். அரச உயர் அதிகாரிகளின் உத்தரவோடு அரச வாகனங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஜூலை 30 00:03

வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென கோட்டாபய கூறியது சட்டத்திற்கு முரண்- ஜே.வி.பி

(வவுனியா, ஈழம்) தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் கூறியமை தேர்தல் விதிகளை மீறும் செயல் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார். அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் வேலை வாய்ப்பு என்பது ஆண்டுதோறும் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டியது. அதனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டமாகக் கருத முடியாது என்று அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார். தேர்தல் முடிவடைந்ததும் அரச நிறுவனங்களில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுமென இன்று புதன்கிழமை களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
ஜூலை 27 23:43

தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு உடன்படிக்கை இல்லை- சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு எந்தவிதமான உடன்படிக்கைகளும் செய்யப்படவில்லையென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கூட்சியோடும் ஸ்ரீலங்காப் பொதுஜன பொரமுனக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேசியதாகவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
ஜூலை 17 21:38

19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய கோட்டாபாய முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரச நிறுவனங்களைச் சுயாதீனமாகச் செயற்பட வைப்பதற்கான 19ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச்செய்து அனைத்து நிறுவனங்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகக் கூறினாலும் அந்தத் தித்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான இரகசிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பொலிஸ் சேவை, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆகியவற்றை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து தனக்குச் சாதகமான மூத்த வழக்கறிஞர்களோடு கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக ஆலோசனை செய்கிறார்.
ஜூலை 15 23:15

சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்திய பத்மா சோமகாந்தன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு எழுத்துலகில் பல விருதுகளைப் பெற்று ஈழத்துப் பெண்களுக்குப் பெருமை சேர்த்தவர் பத்மா சோமகாந்தன் என்று சங்கத்தின் தலைவர் ஆ,குகமூர்த்தி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1934ஆம் ஆண்டு பிறந்த இவர், யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, யாழ் மங்கையற்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். பின்னர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.