செப். 28 21:43
(மட்டக்களப்பு, ஈழம் )
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற முழுமையான கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயழிந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்படிருந்தன. இலங்கை இராணுவத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் போராட்டம் இடம்பெற்றது. வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தபோதும், உரிமையாளர்கள் எவரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை.