(வவுனியா, ஈழம்)
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகக் கொழும்பில் இயங்கும் அமெரிக்காவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டிருப்பதாகவும் திவயின வாரஇதழ் அம்பலப்படுத்தியுள்ளது. திவயின என்ற சிங்கள நாளேட்டின் ஞாயிறு வாரஇதழ் சனிக்கிழமை வெளியிடப்படுகின்றமை வழமையாகும்.