(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழர் பகுதியான வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த் தொற்றுடன் 77 பேர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 27 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் குறித்த நோய் பரவல் ஏற்பட்டு வைத்தியர்கள் உட்பட பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.