(யாழ்ப்பாணம், ஈழம்)
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் இலங்கைக்கு வருமெனவும் சிங்கள இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக விரைவில் கருத்து வெளியிடும் என்றும் கூறினார்.