(வவுனியா, ஈழம்)
மலையகத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழும் மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் என பலரும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்வாறான விசாரணைகள், கண்காணிப்புகளினால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைச் சட்டத்தரணிகளிடம் முறையிட்டுள்ளனர்.