செய்தி: நிரல்
ஜூன் 10 23:25

ரணில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்க ராஜபக்ச அரசாங்கம் திரைமறைவில் ஏற்பாடா?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படுவாரென்றும் செவ்வாய்க் கிழமை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்வதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 09 22:58

கொவிட் நோய்தாக்கம் ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரிப்பு- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) கொவிட் 19 நோய்த் தொற்று இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்தமா குணரட்ன கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்ற ஏழாம் திகதியில் தொற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆபத்து மேலும் தொடரக்கூடிய நிலமை இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 08 23:36

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகிறார்- ஆனால் சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கை அனுமதிக்க முடியாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லையெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 15 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 06 20:46

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் பிரதேசக் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க மறுப்பு

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் ,ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளே இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஜூன் 05 22:05

கொவிட் தொற்று- முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

(முல்லைத்தீவு, ஈழம் ) கொரொனா நோய்த் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த வெள்ளி இரவு ஒருவர் மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாணிக்கப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்ததாக முல்லைத்தீவு மாவட்டச் சுகாதார அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிப்பு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குடும்பஸ்தர் கொரோனா நோய் தொற்றினால் மரணமடைந்ததாக மேற்படி அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
ஜூன் 04 22:07

கப்பல் நுழைய அனுமதியளித்தமை தொடர்பாக மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) கொழும்பு துறைமுகக் கடல் பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் தீக்கிரையாகிய கப்பலுக்கு இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) என்ற இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையாகி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றமையினால் கொழும்புத் துறைமுகக் கடற்பரப்பான கொழும்பு முகத்துவாரத்தில் இருந்து பாணந்துறை வரையான சுமார் 50 கிலோ மீற்றர் தூரமுடைய கடற்பரப்பு மாசடைந்துள்ளதாகவும் இதனால் பொறுப்புள்ள அதிகாரிகள், மற்றும் அரசியல் தொடர்புள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஜூன் 03 22:25

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய பத்துப்பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூன் 02 21:47

பொதுமுடக்கம் 14 ஆம் திகதிவரை நீடிப்பு- அரசாங்கம் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இருவாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுபாடு என இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் இந்த பொதுமுடக்க அறிவிப்பு, 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட வேண்டுமென சுகாதார சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஜூன் 01 21:21

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மீனவக் குடும்பங்களுக்கு மேலும் நெருக்கடி

(மன்னார், ஈழம் ) கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கைத்தீவு முழுவதிலுமான பயணத்தடை காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 15500 தமிழ் பேசும் மீனவக் குடும்பங்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்து அன்றாட உணவிற்கு அல்லலுரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வடமாகாண மீனவக் குடும்பங்கள்
ஜூன் 01 20:04

பேசாலை, தலைமன்னார் மீனவர்கள், தமிழக மீனவர்களுடன் தொடர்பு- கொரோனா பரவக் காரணமென்று குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணும் உள்ளூர் மீனவர்கள் சிலரினால் மன்னார் மாவட்டம் உட்பட முழு இலங்கையிலும் இலகுவாக கொவிட் - 19 நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென சுகாதார அதிகாரிகள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் கொவிட் -19 நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்திய மீனவர்களுடனான கடத்தல் சகவாசமே குறித்த மீனவர்களின் நோய் தொற்றுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.