(மட்டக்களப்பு, ஈழம் )
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.