(மன்னார், ஈழம் )
இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் சில பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதப் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு பகுதியில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வட மாகாண மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட் கடத்தல்களுக்கு இலங்கைப் பொலிஸார், படை அதிகாரிகள் சிலர் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்குவித்ததாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.