(யாழ்ப்பாணம், ஈழம்)
வடமாகாணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மருதங்கேணி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபர் சீனப் பிரஜை அல்ல என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலருக்கு வேலையில்லை என்றும், ஆனால் சீன பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.