(மன்னார், ஈழம்)
இலங்கைத்தீவில் அதி தீவிரமாகப் பரவி வரும் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இன்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கன்டி மகாநாயக்கத் தேரர்கள், அரசாங்கத் தரப்புக் கட்சிகள், எதிர்க்கட்சிகள். இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைச் சங்கங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை அடுத்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.