செப். 12 11:04
(மன்னார், ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வீ.டி.லக்ஸ்மன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தற்போதும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பதவி வகிக்கின்றார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.