ஒக். 03 22:33
(வவுனியா, ஈழம்)
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கும் அணுகுமுறை ஒன்றைக் கையாண்டு வரும் தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் இரண்டாவது அறிக்கையில் ஐவர் கொண்ட சடடத்தரணிகள் குழுவின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத் தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம் குறித்து இன்று தங்கட்கிழமை மாலை இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளை, அல்லது கூட்டமைப்பு மற்றும் முன்னணிகளை, கட்டமைப்பு ரீதியாக இணைக்கும் முன்னெடுப்பாக விளங்கிக்கொள்ள வேண்டாமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.