நவ. 04 18:52
(மன்னார், ஈழம்)
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பொது மக்களின் வீடுகளிலும் மழை நீர் உட்புகுந்துள்ளதினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சௌத்பார், பணங்கட்டுக்கொட்டு, எமில்நகர் மற்றும் தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதினால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இயல்பு வாழக்கையும், முற்றாக சீர்குழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.