நவ. 22 07:57
(மன்னார், ஈழம்)
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 20 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் ஆலயங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகள், திருப்பலிகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என இலங்கை பொலிஸார் முன்வைத்த வினோதக் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார், சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் கடந்த வெள்ளியன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேற்படி நூதனக் கோரிக்கையே, சட்டத்தரணிகளின் பலத்த ஆட்சேபணைகளை அடுத்து மன்னார் நீதிவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.