நிரல்
நவ. 23 22:36

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாண மீனவர்கள் அண்மையில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்பு இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது மீன்பிடி வள்ளங்கள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன சேதமடைந்து பல பாதிப்புகளுக்கும் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களுக்கும் தினசரி முகம் கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு இதுவரை ஒரு சதம் பணம் கூட நஷ்ட ஈடாக வழங்கப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம். ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
நவ. 23 22:28

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் படையினர் குவிப்பு

(வவுனியா, ஈழம்) வட மாகாணத்தின் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதால், இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குறித்த ரோந்து நடவடிக்கைகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்படி மாவட்டங்களில் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவ. 23 00:54

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(கிளிநொச்சி, ஈழம்) இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற பின்னரான சூழலிலும் பூகோள மற்றும் புவிசார் அரசியல் நிலமைகள் தொடர்பாக கூர்மைத் தளத்தில் செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பசில் ராஜபக்ச அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த யூன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
நவ. 22 08:08

முல்லைத்தீவில் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் வாரம் ஆரம்பம்

(முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக தாயகத்தில் மாத்திரமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களால் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளின் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. வீதிகளில் இருந்த வீதி தடைகளுக்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வீதி சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலும்மில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் பொலிசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நவ. 22 07:57

மன்னாரில் மாவீரர் நினைவேந்தலைத் தடுக்கும் பொலிஸாரின் மனு நிராகரிப்பு

(மன்னார், ஈழம்) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 20 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் ஆலயங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகள், திருப்பலிகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என இலங்கை பொலிஸார் முன்வைத்த வினோதக் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார், சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் கடந்த வெள்ளியன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேற்படி நூதனக் கோரிக்கையே, சட்டத்தரணிகளின் பலத்த ஆட்சேபணைகளை அடுத்து மன்னார் நீதிவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நவ. 20 23:08

இந்தோ- பசுபிக் விவகாரமும் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முற்படும் அமெரிக்க இந்திய மற்றும் சீன அரசுகள், இலங்கைக்கு அதிகளவு நிதியுதவிகளை ஏட்டிக்குப் போட்டியாக வழங்கி வருகின்றன என்பதை கொழும்பில் உள்ள இந்த நாடுகளின் தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டாலும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வல்லாதிக்க நாடுகள் நம்புவதுபோல் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்று காண்பிக்கப்பட்டாலும், வடக்குக் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் நோக்கிலேயே இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிதியைக் கையாளுகின்றது.
நவ. 20 20:56

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க அரசாங்கம் ஏற்பாடு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசினால் உருவாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோர் உறிவினர் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தொிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறினார். அயிரத்து 718 ஆவது நாளாக இன்று சனிக்கிழமை தொடர் போராட்டத்தை நடத்தி வரும் எநமு சங்கம் சர்வதேச சமூகத்துக்கு அவசியமான செய்தி ஒன்றை வழங்கவே இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதாகக் கூறினார்.
நவ. 20 19:18

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

(வவுனியா, ஈழம்) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொவிட் 19 நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 37 உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனச் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. சென்ற புதன்கிழமை முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது.
நவ. 18 21:54

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான வழக்கு 22 ஆம் திகதி ஆரம்பம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நவ. 17 23:44

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது- வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை

(வவுனியா, ஈழம்) கொழும்பு சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கும் அதனை வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யவுள்ளதையும் கண்டித்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை மின்சாரத்துறையின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இலங்கைத்தீவு முழுவதும் மின் துண்டிக்கப்படும் நிலை வந்துவிட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்தனர்.