நிரல்
டிச. 22 22:40

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச. 22 20:23

மண் கவ்வியது ரெலோ, புளொட், ஈபிஆரெலெவ்வின் பதின்மூன்றாம் திருத்தக்கோரிக்கை

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது. தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.
டிச. 21 22:30

ரெலோ இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தவறு! திசை திருப்பினாரா சுமந்திரன்?

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணம் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் தயாரித்த அந்த ஐந்து பக்க ஆவணம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் இன்று அனைத்துக் கட்சிகளும் கையொப்பமிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் இன்றை கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு சில விளக்கங்களைக் கொடுத்த பின்னர் குறித்த ஐந்து பக்க ஆவணத்தை மீளத் தயாரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிச. 21 20:10

நெடுந்தீவு, தலைமன்னார் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 55 பேருக்கும் விளக்கமறியல்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு பகல் ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் இழுவைப்படகுகளில் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டவேளை, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்திய மீனவர்களின் ஆறு இழுவைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
டிச. 20 23:19

தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மாறான அரசியல் தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாது- தமிழரசுக் கட்சி

(வவுனியா, ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறான அரசியல்தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாதென தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இன்று முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் பின்னர் மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு பதினொரு மணிவரையும் இரு கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது. கொழும்பு- 07இல் உள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிச. 19 13:47

தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் போயுள்ளன.
டிச. 18 21:52

அரச திணைக்களங்களிடம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் தொடர்பாக இறுதி முடிவு

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு காணப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
டிச. 17 19:44

மன்னார் பிரதேச சபை விவகாரம்- முறையீட்டை நீதிமன்றம் நிராகரிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாணம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவினை மேலும் நீடிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக, அவரினால் இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் வழக்கு விசாரணைகள் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
டிச. 16 20:47

மன்னாரில் பெரும்போகச் செய்கை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கையை முன்னிட்டு விவசாயிகளுக்குத் தேவையான முதலாவது நீர் விநியோகம் முருங்கன் கட்டுக்கரைக் குளத்தின் 11ஆம் கட்டை துருசுக்கு அருகாமையில் 26ஆம் திகதி செவ்வாய் காலை 10.30ககு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் பெரும்போக நெற் செய்கை மன்னார் மாவட்டத்தில் சுமார் 31, 339 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் மேற்படி விவசாய செய்கைகளுக்குத் தேவையான நீர் விநியோகத்தை வழமை போன்று வட மாகாணத்தின் இரண்டாவது பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து மேற்கொள்வதற்கு நீர்பாசனத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிச. 14 23:24

பொருட்கள் இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை- பசில் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை மத்திய வங்கியில் அமெரிக்க டொலரின் இருப்புக் குறைவடைந்ததால், பொருட்கள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். அந்நியச் செலவாணி 1.5.பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்ததால், அத்தியாவசியப் பொருட்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்ய முடியுமென இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் விஜேவர்த்தன கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூறியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பசில் ராஜபக்ச இது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.