டிச. 17 19:44
(மன்னார், ஈழம்)
மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாணம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவினை மேலும் நீடிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை
மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக, அவரினால் இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் வழக்கு விசாரணைகள் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றிருந்தது.