ஜன. 03 11:33
(மன்னார், ஈழம்)
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கொவிட் - 19 மரணம் புத்தாண்டின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இவ்விதம் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர் 70 வயதுடைய வயோதிபர் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மரணமடைந்த மேற்படி வயோதிபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு ஏற்பட்ட சுகயீனம் கடந்த 30ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவேளையில், மேற்கொள்ளப்பட்ட பீ. சி. ஆர். பரிசோதனையின் போது இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்ததாகவும் அதிகாரி கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.