(முல்லைத்தீவு, ஈழம்)
தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கைப் படையின் 572 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களைச் சேகரிப்பதாக மக்கள் கூறுகின்றனர். உடையார் கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, ரெட்பானா, மாணிக்கபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர், வீட்டில் வாழும் மக்களின் விபரங்கரளைக் கேட்டுள்ளனர். விண்ணப்பப் படிவம் ஒன்றைக் கையளித்து, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் இலங்கை இராணுவம் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.