(வவுனியா, ஈழம்)
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்தபோதும், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பில் தொடருகின்றன. இன்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்தபோது, கொழும்பு கொள்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்குப் போக வேண்டும் என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிரதமரகப் பதவியேற்க முடியுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.